Thursday 15 December 2016
முதல்வராக மறைந்தவர்கள்
Sunday 11 December 2016
தமிழ் இலக்கிய வினா-விடை 751 - 1000 (பகுதி - 4)
751. பழைய ஏற்பாடு மொழிபெயர்க்கப்பட்ட மொழி – ஹீப்ரு
752. பழைய சமஸ்கிருத மொழியின் இலக்கண வகை – சொல்லிலக்கணம்
753. பள்ளு நாடகத்தின் மூலம் – உழத்திப் பாட்டு
754. பன்னிரண்டாம் திருமுறையைப் பாடியவர் – சேக்கிழார்
755. பாஞ்சாலங்குறிச்சி வீரசரித்திரம் நூலாசிரியர் – ஜெகவீரபாண்டியர்
756. பாட்டும் தொகையும் எனக் கூறப்படும் இலக்கியம் – சங்கஇலக்கியம்
757. பாட்டும் தொகையும் பிறந்த காலம் – மூன்றாம் சங்கம்
758. பாண்டி நன்னாடுடைத்து நல்ல தமிழ் - ஔவையார்
759. பாண்டிக் கோவை நூல் பாட்டுடைத்தலைவன் – நெடுமாறன்
760. பாண்டிமாதேவி நாவல் ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
761. பாண்டியன் பரிசு ஆசிரியர் – பாரதிதாசன்
762. பாணபுரத்து வீரன் நாடக ஆசிரியர் – சாமிநாத சர்மா
763. பாதீடு - பங்கிட்டுக் கொடுத்தல்
764. பாம்பலங்கார வருக்கக் கோவை பாடியவர் – படிக்காசுப் புலவர்
765. பாரத அன்னைத் திருபள்ளி எழுச்சிப் பாடியவர் – பாரதியார்
766. பாரத சக்தி மகா காவியம் – சுத்தானந்த பாரதியார்
767. பாரத வெண்பா பாடியவர் - பெருந்தேவனார்
768. பாரதப் போரில் இருபடைகளுக்கும் உணவளித்த மன்னன்- பெருஞ்சோற்று உதியன் சேரலாதன்
769. பாரதப்போரில் உணவு வழங்கிய மன்னன்- சோழன் குலமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
770. பாரதிதாசனின் அழகின்சிரிப்பு ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் –
பரமேஷ்வரன்
771. பாரதிதாசனைப் பாவேந்தர் என்றவர் - தந்தை பெரியார்
772. பாரதியின் கண்ணன் பாட்டு,குயில்பாட்டு,பாஞ்சாலி சபதம் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – சேக்கிழார் அடிப்பொடி
என்.இராமச்சந்திரன்
773. பாரிகாதை நூலாசிரியர் – ரா.ராகவையங்கார்
774. பாரியின் சிறப்பைப் பாடிய புலவர் – கபிலர்
775. பாலங்கள் நாவலாசிரியர் - சிவசங்கரி
776. பாவகையால் பெயர்பெற்ற தொகைநூல் – கலித்தொகை , பரிபாடல்
777. பாவைகூத்துச் செய்தி இடம்பெற்ற நூல் – குறுந்தொகை
778. பிசிராந்தையார் சேரனுக்குத் தூது அனுப்பியது – அன்னச்சேவல்
779. பிசிராந்தையார் புலவரின் நாடு – பாண்டியநாடு
780. பிரஞ்சு மொழியை ஆராயத் தோன்றிய முதல் நிறுவனம் – பிரஞ்சு அகாடமி – கி.பி.10
781. பிரபுலிங்க லீலை ஆசிரியர் - சிவப்பிரகாச சுவாமிகள்
782. பிரயோக விவேகம் ஆசிரியர் – சுப்பிரமணிய தீட்சிதர் – 17 –ஆம் நூற்றாண்டு
783. பிள்ளைத்தமிழ்ப் பருவங்கள் – 10
784. பிறந்ததெப்படியோ? நூலாசிரியர் – தெ.பொ.மீ.
785. புண்ணுமிழ் குருதி எனும் அடி இடம் பெற்ற நூல் – பதிற்றுப்பத்து
786. புணர்ச்சி விதியைக் கூறியவர் - புத்தமித்திரர்
787. புதியதும் பழையதும் நூலாசிரியர் - உ.வே.சா
788. புதுக்கவிதை வடிவில் முதன்முதலில் கவிதை எழுதியவர் – ந.பிச்சமூர்த்தி
789. புதையல் நாவலாசிரியர் - கலைஞர் கருணா நிதி
790. புராட்டஸ்டண்ட் கிருத்துவர் பயன்படுத்தும் பைபிளை மொழிபெயர்த்தவர் – போவர் -1871
791. புராணங்கள் எண்ணிக்கை – 18
792. புலவர் கண்ணீர் நூலாசிரியர் - மு.வரதராசன்
793. புலவர் புராணம் பாடிய ஆசிரியர் - தண்டபாணி சுவாமிகள்
794. புலியூர் யமக அந்தாதி நூலின் ஆசிரியர் – கணபதி ஐயர்
795. புறநானூற்றில் அமைந்து வரும் பா –அகவற்பா
796. புறநானூற்றில் ஆசிரியர் பெயர் தெரியாத பாடல்கள் – 14
797. புறநானூற்றின்
கிடைக்காத பாடல் – 267,268
798. புறநானூற்றின் பழைய உரை கிடைத்துள்ள பாடல் எண்ணிக்கை - 260
799. புறநானூற்றின் பாடல் எண்ணிக்கை – 399+ கடவுள் வாழ்த்து
800. புறநானூற்றின் பாடலின் அடியளவு – 4 -40
801. புறநானூற்றின் பாவகை - ஆசிரியப்பா
802. புறநானூற்றின் வேறு பெயர்கள் – புறப்பாட்டு,புறம்,புறம்புநானூறு
803. புறநானூற்றைப் பாடிய புலவர்கள் எண்ணிக்கை -157 /160
804. புறப் பாட்டு எனும் நூல் - புறநானூறு
805. புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியர் – ஐயனாரிதனார்
806. புறப்பொருள் வெண்பாமாலை ஆதார நூல் – பன்னிருபடலம்
807. புறப்பொருள் வெண்பாமாலையின் உரையாசிரியர் – சாமுண்டி தேவநாயகர்
808. புறப்பொருளின் பாவகை - வெண்பா
809. புறவீடு விடுதல் - குடை நிலை வஞ்சி
810. புனர்ஜென்மம் சிறுகதைத் தொகுப்பாசிரியர் –
கு.ப.ராஜகோபாலன்
811. புன்னையைத் தங்கையாக எண்ணும் தலைவி இடம்பெற்ற நூல் - நற்றிணை
812. புனிதவதியார் இறைவனுடைய திருக்கூத்தைக் கண்ட ஊர் –
திருவாலங்காடு
813. புனிதவதியாரின் வேறுபெயர் – காரைக்காலம்மையார்
814. பூதத்தம்பி விலாசம், முனிமாலிகை நாடக ஆசிரியர் – சங்கரதாசு சுவாமிகள்
815. பெண்களால் பிறந்த வீட்டுக்குப் பயன் இல்லை எனும் நூல் – கலித்தொகை
816. பெண்களின் பருவங்கள் – ஏழு
817. பெண்புத்தி மாலை ஆசிரியர் - முகம்மது உசைன் புலவர்
818. பெண்மதிமாலை எழுதியவர் – வேதநாயகர்
819. பெத்லகேம் குறவஞ்சி பாடியவர் – வேதநாயக சாஸ்திரியார்
820. பெரிய புராண ஆராய்ச்சி நூலாசிரியர் – டாக்டர் இராசமாணிக்கனார்
821. பெரிய புராண உட்பிரிவு
- சருக்கம்
822. பெரிய புராணத்திற்கு சேக்கிழார் இட்ட பெயர் - திருத்தொண்டர் புராணம்
823. பெரியபுராணத்திற்கு மூல நூல்
திருத்தொண்டர் திருத்தொகை/திருத்தொண்டர் திருவந்தாதி
824. பெரியாழ்வார் எடுத்த அவதாரம் – கருடாழ்வார்
825. பெருங்கதை மூல நூல் – பிருகத்கதா
826. பெருங்கதையின் காண்டப்பிரிவு – ஐந்து
827. பெருங்குறிஞ்சி என்றழைக்கப்படும் நூல் – குறிஞ்சிப்பாட்டு
828. பெருந்திணைக்கு உரியது - ஏறிய மடல் திறம்
829. பேராசிரியரின் வேறுபெயர் –மயேச்சுரனார்
830. பேராசிரியரும் ,நச்சினார்க்கினியரும் நற்றிணைக்கு உரை எழுதினர் என்றவர்- நச்சினார்க்கினியர் (சிந்தாமணி உரையில்)
831. பைபிளைத் தமிழில் மொழி பெயர்த்தவர் – சீகன் பால்கு ஐயர்
832. பொருட்கலவை நூல் – பரிபாடல்
833. பொன்வண்ணத்தந்தாதி ஆசிரியர் - சேரமான் பெருமாள் நாயனார்
834. பொன்னியின் செல்வன் நாவலாசிரியர் – கல்கி
835. பொன்னொடு வந்து கறியொடு பெயரும் – பட்டினப்பாலை
836. போரில் கணவனை கொன்ற வேலாலே தம் உயிரை மனைவி
மாய்த்துக் கொள்வது – ஆஞ்சிக் காஞ்சி
837. போரில் தன் மறப் பெருமையை கூறுதல் – பெருங்காஞ்சி
838. பௌத்த சமயப் பெருங்காப்பியங்கள் – மணிமேகலை,குண்டலகேசி
839. பௌத்த மதத்தின் வேறு பெயர் – அனாத்ம வாதம்
840. மகாதேவ மாலை ஆசிரியர் – வள்ளலார்
841. மகேந்திர வர்மன் எழுதிய நூல் – மத்தவிலாசப் பிரகசனம் – வடமொழி
842. மங்கையர்கரசியின் காதல் எழுதியவர் - வ.வே.சு ஐயர்
843. மங்கையராகப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமம்மா - கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை
844. மச்சபுராணம் எழுதியவர் – வடமலையப்ப பிள்ளை
845. மண நூல் – சீவக சிந்தாமணி
846. மண்குடிசை நாவலாசிரியர் - மு.வ
847. மண்ணியல் சிறுதேர் நூலின் ஆசிரியர் – பண்டிதமணி கதிரேசன் செட்டியார்
848. மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் – சம்பந்தர் –தேவாரம்
849. மண்திணி ஞாலம் - பூமி
850. மணவாளதாசர் எனப்புகழப்படுபவர் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
851. மணிக்கொடி இதழ் தொடங்கப்பட்ட ஆண்டு – 1933
852. மணிப்பிரவாள நடைக்கு இலக்கணம் கூறும் மலையாள நூல் – லீலா திலகம்
853. மணிப்பிரவாள நடையில் அமைந்த சமணக் காவியம் – ஸ்ரீபுராணம்
854. மணிபல்லவம் நாவலாசிரியர் –நா.பார்த்தசாரதி
855. மதங்க சூளாமணி ஆசிரியர் – விபுலானந்தர்
856. மதிவாணன் நாவலாசிரியர் - பரிதிமாற்கலைஞர்
857. மதுரைக்காஞ்சி உணர்த்தும் பொருள்-நிலையாமை
858. மதுரைக்காஞ்சிப் பாடியவர் - மாங்குடி மருதனார்
859. மந்திரமாலை நூலின் ஆசிரியர் - தத்துவப் போதக சுவாமிகள்
860. மந்திரிகுமாரி எழுதியவர் – கலைஞர் கருணாநிதி
861. மயிலை நாதர் நன்னூலுக்கு எழுதிய உரை – மயிலை நாதம்
862. மரத்தை மறைத்தது மாமத யானை எனப் பாடியவர் – திருமூலர்
863. மராட்டியர் காலத்தில் தோன்றிய நாடகங்கள் – அரிச்சந்திரர்/சிறுதொண்டர்
864. மலைபடுகடாம் நூலின் ஆசிரியர் – கூத்தராற்றுப்படை
865. மறவர் தம் அரசனிடமிருந்து காஞ்சிப்பூவினைப் பெறுவது – பூக்கோள் நிலை
866. மறைந்து போன தமிழ் நூல்கள் ஆசிரியர் - மயிலை .சீனி.வேங்கடசாமி
867. மறைமலையடிகள் மொழிபெயர்த்த நூல் - சாகுந்தலம்
868. மறைமலையடிகளின் இயற்பெயர் – வேதாசலம்
869. மனச்சான்று நூலாசிரியர் – மு.வ
870. மனச்சிறகு கவிதை நூலாசிரியர் –மு.மேத்தா
871. மனத்தைக் கவரும் கலை
– நாடகக்கலை
872. மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறநானூறு
873. மன்னன் ஏவுதலின்றித் தானே நிரை கவர்தல் – வெட்சி
874. மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் நூலாசிரியர் - திரு.வி.க
875. மனுமுறை கண்ட வாசகம் –உரை நடை நூலாசிரியர் – வள்ளலார்
876. மனைவியின் உரிமை – வ.சுப.மாணிக்கம்
877. மனோன்மணியம் சுந்தரம்பிள்ளையின் நாடகப் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம் –அனிச்ச அடி(ஆ.பழனி)
878. மனோன்மணியம் நாடகாசிரியர் – பேராசிரியர் சுந்தரம் பிள்ளை
879. மனோன்மணீயம் நாடக முரணன் – குடிலன்
880. மாங்கனி குறுங்காவியம் எழுதியவர் - கண்ணதாசன்
881. மாசில் வீணையும் எனத்தொடங்கும் பாடலைப் பாடியவர் – திருநாவுக்கரசர்
882. மாணிக்கவாசகர் பாடிய கோவை – திருக்கோவை
883. மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் நூலாசிரியர் – மறைமலையடிகள்
884. மாதவி கோவலனுக்கு எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை
2 (தாழைமடலில் செம்பஞ்சுக் குழம்பால் எழுதினாள்)
885. மாதேவடிகள் என்றழைக்கப்படுபவர் - சேக்கிழார்
886. மாரிவாயில் நூலாசிரியர் - சோமசுந்தர பாரதியார்
887. மாற்றாரோடு போர்மலைதல் – தும்பை
888. மாறனலங்கார ஆசிரியர் – திருக்குருகைப் பெருமாள்
–ஊர் ;
திருக்குருகை என்னும் ஆழ்வார் திருநகரி
889. மாறனலங்காரம் ஆசிரியர் – குருகைப் பெருமாள் கவிராயர்
890. மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
890. மானிடற்குப் பேசப்படின் வாழ்கிலேன் என்றவர் – ஆண்டாள்
891. மீனாட்சியம்மை குறம் ஆசிரியர் – குமரகுருபரர்
892. மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழின் ஆசிரியர் – குமரகுருபரர்
893. மு.கதிரேசன் செட்டியார் எழுதிய மண்ணியல் சிறுதேர் மொழிபெயர்ப்பு
– மிருச்ச கடிகம்
894. முக்காண்டிகை உரை எனும் நன்னூல் உரை எழுதியவர்-விசாகப் பெருமாள் ஐயர்
895. முகையதீன் புராணம் நூல் ஆசிரியர் – வண்ணக்களஞ்சியப் புலவர்
896. முச்சங்கங்கள் இருந்தது பொய் என்றவர்கள் – பி.டி .சீனிவாச ஐயங்கார்,கே.என்.சிவராசப்பிள்ளை,நமச்சிவாயமுதலியார்,கோ.கேசவன்,கே.முத்தையா
897. முச்சங்கங்கள் குறித்து முதலில் கூறிய நூல் – இறையனார் களவியல் உரை
898. முச்சங்கங்களை ஏற்பவர்கள் – உ.வே.சா,கா.சு.பிள்ளை,கா.அப்பாதுரையார்,தேவநேயப்பாவணர்
899. முசு
– குரங்கு
900. முடத்திருமாறன் மன்னனின் காலம் – கடைச்சங்க காலம்
901. முத்தமிழ் பற்றிக் கூறிய முதல் நூல் – பரிபாடல்
902. முத்து மீனாட்சி நாவலாசிரியர் – மாதவையா
903. முதல் சங்கத்தில்
இருந்த
மொத்த புலவர்கள் – 4449
904. முதல் சங்கத்தை ஆதரித்த அரசர்கள்
- 89
905. முதல் சங்கம் இருந்த ஆண்டுகள் – 4440
906. முதல் துப்பறியும் நாவல் – தானவன் -1894
907. முதல் தூது நூல் – நெஞ்சு விடு தூது
908. முதலில் தொகுக்கப்பட்ட எட்டுத்தொகை நூல் – குறுந்தொகை
909. முதற்சங்க இலக்கியங்கள் – பரிபாடல்(பழம்பாடல்),
முதுநாரை,முதுகுருகு,களரியாவிரை,செய்கோன்,தரச்செலவு.
910. முதற்சங்க காலத்து இலக்கண நூல் – அகத்தியம்
911. முதற்சங்கம் இருந்த இடம் – கடல் கொண்ட தென் மதுரை
912. முதன் முதலில் தொகுக்கப்பட்ட சங்க நூல் புறநானூறு எனக் கூறியவர் – சிவராசப்பிள்ளை
913. முதன் முதலில் மேடையில் நடித்த நாடகம் – டம்பாச்சாரி நாடகம்
914. முந்தையிருந்து நட்டோர் கொடுப்பின் நஞ்சும் உண்பர் நனிநாகரிகர் –நற்றிணை
915. முந்நீர் வழக்கம் மகடுவோடில்லை
- தொல்காப்பியம்
916. முருகன் அல்லது அழகு நூலாசிரியர்- திரு.வி.க
917. முருகனின் ஊர்தி - மயில் ( சூரபத்மன்)
918. முருகு,புலவராற்றுப்படை என அழைக்கப்படும் நூல் –திருமுருகாற்றுப்படை
919. முல்லைக்கலியைக் கலிப்பாவில் பாடிய மன்னன் – சோழன் நல்லுருத்திரன்
920. முல்லைக்குப் புறமான புறத்திணை – வஞ்சி
921. முல்லையும் பூத்தியோ ஒல்லையூர் நாட்டே என்று கையறு நிலையைப் பாடியவர் - குடவாயில் கீரத்தனார்
922. முழுமையாகக் கிடைக்காத சங்க இலக்கிய வகைப் பாடல்கள் – அகப்பாடல்கள்
923. முன்கிரின் மாலை எழுதியவர் - நயினாமுகமது புலவர்
924. மூதின் முல்லை – வாகை
925. மூதுரை நூலின்வேறு பெயர் – வாக்குண்டாம்
926. மூவருலா பாடியவர் – ஒட்டக்கூத்தர்
927. மூவரை வென்றான் சிறுகதை ஆசிரியர் – நா.பார்த்தசாரதி
928. மூன்றாம் சங்க இலக்கியங்கள் – பெருந்தொகை, பத்துப்பாட்டு,
கூத்து, வரி,சிற்றிசை,பேரிசை
929. மூன்று சங்கங்கள் நிலவிய ஆண்டு – 9990
930. மூன்று சங்கங்களையும் வளர்த்த பாண்டிய மன்னர்களின் எண்ணிக்கை – 197
931. மெக்காலே கல்வி முறை அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு – 1835
932. மெழுகுவர்த்தி நாடகாசிரியர் – கே.பாலச்சந்தர்
933. மேருமந்திர புராணம் எழுதியவர் – வாமனாசாரியார்
934. மேல்சபை உறுப்பினராக இருந்த நாடகக்கலைஞர் – டி.கே.சண்முகம்
935. மொழி பெயர்த்து அதர்ப்பட யாத்தல் என மொழிபெயர்ப்புக்கு வித்திட்டவர்- – தொல்காப்பியர்
936. மோரியர்,நந்தர், வடுகர் என மன்னர்கள் பெயர் இடம் பெறும் சங்க நூல் –அகநானூறு
937. மௌரியர்களின் தமிழகப் படைஎடுப்பைக் கூறும் நூல் – அகநானூறு
938. யவனர்கள் – கிரேக்கர் ,உரோமானியர்
939. யாதும் ஊரே யாவரும் கேளிர் – கணியன்பூங்குன்றனார் –புறநானூறு
940. யாப்பருங்கலக் காரிகை ஆசிரியர் – அமிர்த சாகரர்
941. யாப்பருங்கலப் புற நடை நூல் – யாப்பருங்கலக் காரிகை
942. யாப்பருங்கலம் உரையாசிரியர் - குணசாகரர்
943. யாப்பருங்கலம் எழுதப்பெற்ற ஆண்டு – 10 –ஆம் நூற்றாண்டு
944. யாருக்காக அழுதான் சிறுகதை ஆசிரியர் – ஜெயகாந்தன்
945. யாருக்கும் வெட்கமில்லை நாடக ஆசிரியர்- சோ
946. யாழ் நூலாசிரியர் – விபுலாநந்தர்
947. ரத்தக் கண்ணீர் ஆசிரியர் – திருவாரூர் தங்கராசு
948. ரவிக்கை - எந்த மொழி – தெலுங்கு
949. ராஜராஜசோழன் ஆசிரியர் – அரு.இராமநாதன்
950. . ராஜி நாவலின் ஆசிரியர்
- எஸ்.வையாபுரிப் பிள்ளை
951. லீலாவதி கணித நூலாசிரியர் – பாஸ்கராச்சாரியார்
952. வகைதரு முத்தமிழாகரன் என நம்பியாண்டார் நம்பி குறிப்பிடப்படுபவர் -திருஞானசம்பந்தர்
953. வச்சிணந்தி மாலை நூலாசிரியர் – குணவீரபண்டிதர்
954. வச்சிணந்தி மாலையின் வேறு பெயர் – வெண்பாப்பாட்டியல்
955. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
956. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
955. வசன கவிதையின் முன்னோடி – பாரதியார்
956. வஞ்சி நெடும்பாட்டு என்றழைக்கப்படும் நூல்-பட்டினப்பாலை
957. வஞ்சி மன்னன் வராதபடி தடுத்து
நிறுத்துவது – தழிஞ்சி
958. வஞ்சி மாநகரம் ஆராய்ச்சி நூலாசிரியர் - இரா.இராகவையங்கார்
959. வஞ்சிப்பாவின் சீர் - கனிச்சீர்
960. வட நூற்கடலை நிலை கண்டுணர்ந்தவர் – சேனாவரையர்
961. வட்கார் மேல் செல்வது
- வஞ்சி
962. வடநாட்டு மொழிகளுக்கு அடிப்படை மொழிகள்- பாலி,பிராகிருதம்
963. வண்ணக் களஞ்சியப் புலவரின் இயற்பெயர் - முகமது இபுராகிம்
964. வரபதி ஆட்கொண்டான் மன்னனின் அவைக்களப் புலவர் –வில்லிபுத்தூரார்
965. வன்புரை மூவர் தண்டமிழ் வனப்பு – தொல்காப்பியம் ,( மூவேந்தர்கள் பற்றிய குறிப்பு )
966. வனவாசம் சுய சரிதையாசிரியர் – கண்ணதாசன்
967. வா.செ.குழந்தைசாமியின் இயற்பெயர்
- குலோத்துங்கன்
968. வாளைப் புற வீடு விடுதல் - வாள் நிலை வஞ்சி
969. வி.கே.சூரிய நாராயண சாஸ்திரி – பரிதிமாற்கலைஞர்
970. விபுலானந்தர் இயற்பெயர் – மயில்வாகனன்
971. விரிச்சி - குறி கேட்டல்
972. விருது பெற்றவர் – மாணிக்கவாசகர்
973. வினாயகர் அகவல் பாடியவர் – ஔவையார்
974. வினோத ரச மஞ்சரி நூலாசிரியர்- அஷ்டாவதானம் வீராசாமிச் செட்டியார்
975. வீடும் வெளியும் நாவலாசிரியர் - வல்லிக் கண்ணன்
976. வீரசோழியத்தின் பழைய உரையாசிரியர் – பெருந்தேவனார்
977. வீரசோழியம் ஆசிரியர் – பொன்பற்றியூர்ச் சிற்றரசர் புத்தமித்திரர்
978. வீரமாமுனிவர் இயர் பெயர் – கான்ஸ்டான்டைன் ஜோசப் பெஸ்கி
979. வீரர்க்கு அன்றி அவர்குடி மகளிர்க்கும் உள்ள வீரத்தைச் சிறப்பிப்பது - மூதின்முல்லை
980. வெட்சி -
நிறைகவர்தல்
981. வெண்டேர்ச்
செழியனின் காலம் – இடைச்சங்க காலம்
982. வெண்பாப்பாட்டியலின் வேறு பெயர் – வச்சநந்திமாலை
983. வெறியாட்டு - வள்ளிக் கூத்தாடுவது
984. வேங்கையின் மைந்தன் நாவலாசிரியர் - அகிலன்
985. வேதஉதாரணத் திரட்டு ஆசிரியர் -
இரேனியஸ்
986. வேதநாயக சாஸ்திரியை ஆதரித்தவர் - சரபோஜி மன்னர்
987. வேதநாயகம் பிள்ளை எழுதிய நூல் – நீதிநூல்
988. வேய் - உளவு-ஒற்றாராய்தல்
989. வேருக்கு நீர் ( சாகித்திய அகாடமி பரிசு ) நாவாலாசிரியர் –ராஜம் கிருஷ்ணன்
990. வைகறைப் பொழுதுக்குரிய நிலம் -
மருதம்
991. வைதாலும் வழுவின்றி வைவாரே எனக் குறிக்கப்படுபவர் - ஆறுமுக நாவலர்
992. ஜி.யு.போப்பைக் கவர்ந்த எட்டுத்தொகை நூல் – புறநானூறு
993. ஜீவகாருண்யம் போதித்தவர் – வள்ளலார்
994. ஜீவபூமி நாவலாசிரியர் – சாண்டில்யன்
995. ஸ்வர்ணகுமாரி சிறுகதையாசிரியர் – பாரதியார்
996. கண்ணீர் பூக்கள் கவிதை நூலாசிரியர்- நா.காமராசன்
997. அடிகள் முன்னம் யானடி வீழ்ந்தேன் – மாதவி
998. மணிமேகலைக்கு துறவு தந்தவர் –அறவண அடிகள்
999. பால்மரக்காட்டினிலே நாவலாசிரியர் –அகிலன்
1000. பாலும் பாவையும் நாவலாசிரியர் - விந்தன்
Subscribe to:
Posts (Atom)